டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் 17 பேர் படுகாயம் | Tindianam Updates

திண்டிவனத்தில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்:
Tindianam Updates : சென்னை மத்தூரை சேர்ந்த 20 பேர் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை சின்னமாத்தூரை சேர்ந்த அருண்குமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார்.
வேனானது திண்டிவனம் அடுத்த மேல்பேரடிகுப்பம் அருகே வந்து கொண்டிருக்கும்போது வேனின் பின்பக்க வலது டயாரானது வெடித்துள்ளது. இதனால் வேனானது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ரமனம்மாள், புஷ்பா, ஆனந்தன், சுரேஷ், முனியம்மாள் லதா, விஜயலட்சுமி உட்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்ததில்படுகாயம் அடைந்த அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேன் விபத்துக்குள்ளானது குறித்து திண்டிவனம் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார் | Tindianam Updates
திண்டிவனத்தில் மின்தடையை சீரமைக்க முயன்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு மின்வினியோகம் தடைபட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. எனவே அந்த மின் வினியோக தடையை சரிசெய்ய மின் வாரிய ஊழியரான விநாயகம் மகன் அரவிந்தன் இரவு 11:30 மணியளவில் பாதிரி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் சரி செய்து கொண்டிருந்தார்.
அரவிந்தன் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சீரமைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
மின்சாரம் பாய்ந்ததில் அரவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் சிவா கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனத்தில் பிஎஸ்என்எல் அலுவலக பொருட்கள் ஜப்தி.
திண்டிவனம் BSNL அலுவலகத்தில் உள்ள பொருட்கள் திண்டிவனம் நகராட்சி ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.
பிஎஸ்என்எல் அலுவலகம் திண்டிவனம் நகராட்சிக்கு 9 ஆண்டுகளாக வரி பாக்கியை செலுத்தாததால் இந்த ஜப்தியானது செய்யப்பட்டது.
திண்டிவனம் பிஎஸ்என்எல் அலுவலகமானது ரூபாய் 15 லட்சத்து 94 ஆயிரத்து 436 ரூபாயை திண்டிவனம் நகராட்சிக்கு வரியாக செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தாததால் திண்டிவனம் நகராட்சி ஆணையர் தலைமையில் தண்டோரா போடப்பட்டு திண்டிவனம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்த டேபிள் சேர்கள் மற்றும் அனைத்து பொருட்களும் ஜப்தி செய்யப்பட்டது.
ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் நகராட்சி வண்டியில் ஏற்றி நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்காரணமாக பிஎஸ்என்எல் நிர்வாகத்தினர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் தொலைபேசி மற்றும் நெட்வொர்க் ஆகியவற்றை துண்டித்து உள்ளனர். இதனால் திண்டிவனத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் திண்டிவனம் மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. இவ்வாறு திண்டிவனத்தில் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் ஜப்தி நடப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுபோன்ற திண்டிவனம் மற்றும் விழுப்புரம் சார்ந்த அரசியல் க்ரைம் மற்றும் அன்றாட நிகழ்வு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம் திண்டிவனம் இணையத்தை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.