85 People Including Students Injured Mountain Dees Sting : மலை தேனீக்கள் கொட்டி மாணவர்கள் உட்பட 85 பேர் காயமடைந்தனர்.

109

 

 

திண்டிவனம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த மலை தேனீக்கள் கொட்டியதில், மாணவ, மாணவியர் உட்பட 85 பேர் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் உள்ள தனியார் சி. பி. எஸ். இ. , பள்ளி வளாகத்தின் முகப்பில் மலை தேனீக்கள் பெரிய அளவில் கூடு கட்டியிருந்தது. நேற்று மதியம் 12: 10 மணியளவில், தேனீக்கள் கூடு கலைந்து, தேனீக்கள் பறந்து பள்ளி வளாகத்தில் இருந்த மாணவ, மாணவிகளை மற்றும் பள்ளி ஊழியர்களையும் கொட்டியது.

அனைவரும் வலி தாங்காமல் அலறியடித்து ஓடினர். இதில், 85 பேர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் பள்ளி வேன்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதிக அளவில் தேனீக்கள் கொட்டியதால், 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, கை, கால், முகம் வீங்கியது. ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

அதிக காயமடைந்த மாணவ, மாணவியர்கள் 14 பேர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தேனீக்கள் கூட்டை தண்ணீர் பீய்ச்சிஅடித்து முற்றிலும் அழித்தனர்.

You might also like