ஓ எஸ் மணியன் காரை மறித்த அதிமுக நிர்வாகி | Villupuram ADMK News

651

ஓ எஸ் மணியன் காரை மறித்த அதிமுக நிர்வாகி

Villupuram ADMK News : விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியனின் காரை மறித்து அதிமுக நிர்வாகி தர்ணா நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுகவில் ஒன்றிய நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் ஜீவானந்தம், ஓ எஸ் மணியன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

தேர்தலின்போது மதியம் சுமார் 12 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஓஎஸ் மணியன் காரில் பயணித்தார்.

அப்போது விழுப்புரம் அடுத்த கப்பூரை சேர்ந்த கோலியனூர் தெற்கு ஒன்றிய அதிமுக பொருளாளர் அன்பழகன் ஓ எஸ் மணியன் சென்று கொண்டிருந்த காரின் முன் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

அதன்பின் அவரை அழைத்து ஓஎஸ் மணியன் பேசினார். ஒன்றிய பொருளாளர் பதவிக்கு விருப்ப மனு கொடுக்க விடாமல் கட்சியினர் தடுப்பதாக அவர் கூறியதை அடுத்து ”என்னிடம் தெரிவிக்க வேண்டியது தானே” என அவரை சமாதானம் செய்தார்.

பின் ஓஎஸ் மணியன் புறப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

அதிமுகவில் ஒன்றிய நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் | Villupuram ADMK News

Villupuram ADMK News : விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுகவில் ஒன்றிய நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சிவி சண்முகம் அவர்கள் இதற்கு தலைமை தாங்கினார்.

தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளருமான ஓஎஸ் மணியன் மற்றும் முன்னாள் அமைச்சரும் நாகப்பட்டினம் மாவட்ட அவைத் தலைவருமான ஜீவானந்தம் ஆகியோரும் அதனை தொடக்கி வைத்தனர்.

இதில், மரக்காணம், கோலியனுார், காணை, விக்கிரவாண்டி, மயிலம், வானுார் ஆகிய ஒன்றியங்களுக்கு விழுப்புரம், கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் தேர்தல் நடைபெற்றது.

மேலும் கிளியனுார், கண்டமங்கலம், ஒலக்கூர், வல்லம், செஞ்சி, மேல்மலையனுார் ஆகிய ஒன்றியங்களுக்கு விழுப்புரம், கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் தேர்தல் நடைபெற்றது.

விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம் நகராட்சிகளுக்கும் மரக்காணம், அனந்தபுரம், செஞ்சி,  வளவனுார், விக்கிரவாண்டிஆகிய பேரூராட்சிகளுக்கும் மாவட்ட அ. தி. மு. க. , கட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது.

3 நகராட்சி, 5 பேரூராட்சி, 22, ஒன்றியங்களை சேர்ந்த 270 நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலின் போது எம். எல். ஏ. , க்கள் சக்கரபாணி, அர்ஜுனன், நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர் ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

விழுப்புரம் மாவட்டத்தில் நகை கடன் தள்ளுபடி

Villupuram DMK News : விழுப்புரம் மாவட்டத்தில் நகை கடன் தள்ளுபடி சான்றிதழானது வழங்கப்பட்டு வருகின்றது.

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பொது நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் பொன்முடி வருகை தந்தார்.

மேலும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி இதற்கு தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி அவர்கள் 30 பேருக்கு 14 லட்சத்து 86 ஆயிரத்து 500 பேருக்கு நகை கடன் தள்ளுபடிகான சான்றிதழை வழங்கினார்.

ponmudi distriute a certificate to people

மேலும் இந்த நிகழ்ச்சியில் எம் எல் ஏ-கள் லட்சுமணன், புகழேந்தி மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் துணை சேர்மன் ஸ்ரீதேவியின் சேரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பயன்பெற்ற அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு நன்றி கூறி துணைப்பதிவாளர் பிரியதர்ஷினி நன்றியுரையாற்றினார்.

You might also like