Child Protection Awareness Rally : குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி.

210

Child Protection Awareness Rally : குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி.

 

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சாா்பில், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி செஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பாா்கவி தலைமை வகித்தாா். செஞ்சி டிஎஸ்பி கவினா பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பாண்டைராஜன், மகளிா் காவல் நிலைய ஆய்வாளாா் சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகா் முருகன் வரவேற்றாா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செஞ்சி காந்தி பஜாா் வீதி, கூட்டுச்சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பேரணி சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், செஞ்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்று குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.

You might also like