Marakkanam : கழுவெளி ஏரியில் உயர்மட்ட பாலம் கட்டக்கோரி ஆர்ப்பாட்டம்

Marakkanam : மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் கழுவெளி ஏரியில் உயர் மட்ட மேம்பாலம் அமைத்துதர கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம், நடுக்குப்பம், கோட்டிக்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுவெளி ஏரியில் உயர் மட்டமேம்பாலம் அமைத்து தர கோரி மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, தாசில்தார் பாலமுருகனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு அளித்தனர்.