Tindivanam : திண்டிவனத்தில் கஞ்சி கலைய ஊர்வலம் நடந்தது.

Tindivanam : திண்டிவனம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், மணக்குள விநாயகர் திருமண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆதிபராசக்தி திருவுருவ படத்திற்கு சிறப்பு ஆராதனை நடந்ததுதொடர்ந்து நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக மன்றத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் கஞ்சி கலைய ஊர்வலம் நடந்தது. இதில் மாவட்ட துணை தலைவர் சுகுமார், மன்ற நிர்வாகிகள் முரளிதர், ரத்தினவேலு, கார்த்திக், சுகுணா, பானு, ஸ்ரீமதி, மாலா, ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.