Mailam: மயிலம் அருகே தீப்பிடித்து இரண்டு வீடுகள் சேதம்

102

Mailam: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த தென்கலவாய் கிராமத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகல் எரிந்து சாமலாகின. தென்கலவாய் கிராமத்தைச் சேர்ந்த தயாளன் மனைவி பானுமதி (47), ஆறுமுகம் மனைவிசெல்வி (50) வீடுகளை சுற்றி பெஞ்சல் புயலால் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இரு குடும்பத்தாரும் தங்கள் வீட்டில் வசிக்காமல், உறவினர்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலை யில், இருவரின் நேற்றுமுன் தினம் நள்ளிரவு 11 மணி அளவில் திடீரென வீட்டினுள் மின்கசிவு ஏற்பட்டு, வீட்டில் தீ பற்றி எரிந்துள் ளது. மேலும், முதலில் ஒரு வீட்டில் பற்றிய தீ, அருகில் இருந்த வீட்டிற்கும் பரவிய தால், இரு வீடுகளின் மேற் கூரையும், அதில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது. இதனைப் பார்த்த கிராம மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You might also like