திண்டிவனம் : பெண் வேட்பாளர் தாக்குதல்- போலீஸ் நிலையம் சூறை

616

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்குபதிவின்போது ஒரு வார்டில் வாக்குச்சாவடி அமைந்திருக்கும் பகுதியில் அதிமுக கட்சியின் பெண் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது திமுகவுக்கும் அதிமுக கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் அங்கிருந்த இருதரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து வாக்குபடிவானது அங்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

போலீஸ் நிலையம் சூறை

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க அதிமுக பெண் வேட்பாளர் சுதா அவரது கணவர் சரவணன் ஆகியோர் ரோஷனை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு திடீரென 30 பேர் கொண்ட கும்பல் போலீஸ் நிலையத்தில் இருந்த தொட்டிகளை எடுத்து தூக்கி போட்டனர். பின்னர் அதிமுக வேட்பாளரின் கணவரையும் தாக்கினர் இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்த அதிமுகவினர் அங்கு திரண்டதால் தாக்குதலில் ஈடுபட்டிருந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. சிறிது நேரம் அந்த இடத்தில் பதட்டம் நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் போலீசார் அதிமுகவினரை சமாதானப்படுத்தினர்.

மேலும் எவ்வித இடையூறும் செய்யாமல் கலைய செய்தனர். பின்னர் சுதாவும் அவரது கணவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பரபரப்பான இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அங்கு வந்து போலீஸ் அதிகாரிகளை சந்தித்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது. மேலும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க இருதரப்பு வேட்பாளர்களின் வீடுகளிலும் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

You might also like