தனது சொந்த இடத்தில் அங்கன்வாடி மையம் – திண்டிவனம் கவுன்சிலர்

தனது சொந்த இடத்தில் அங்கன்வாடி மையம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அங்கன்வாடி மையத்தை தனது சொந்த கட்டிடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டிவனம் 12வது வார்டு சேர்ந்த அதிமுக கவுன்சிலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
திண்டிவனம் நகராட்சியில் 12வது வார்டு தீர்த்தக்குளம் பகுதியில் இயங்கிவந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அதனை புதுப்பிக்கும் பணியானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
எனவே தற்போது அந்த அங்கன்வாடி மையமானது அதே பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. நகராட்சி ஒத்துழைப்புடன் சொந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையமானது செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையை சொந்த இடத்தில் மாற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். தீர்த்த குளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கிணற்றை தூர்வார்வதற்கான முயற்சியும் எடுப்பேன்.
மேலும் பஜனை கோவில் தெரு, மல்லிபத்தர் தெருவில் குடிநீர் டேக்குகள் அமைப்பதற்கான முயற்சியும் எடுப்பேன். ராஜாஜி தெரு உள்ளிட்ட தெருக்களில் வாய்க்கால்கள் தூர்வாரி சுத்தம் செய்து புதுப்பிக்க முயற்சி எடுப்பேன்.
முதியவர்களுக்கு ஓய்வூதியம் புதிதாக ரேஷன் கார்டு பெற்றுத்தருவது போன்றவற்றிற்கும் முயற்சி எடுப்பேன்.
சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், குப்பை இல்லாத வார்டாக 12வது வார்டை மாற்றுவதற்கான முயற்சிகளையும் எடுப்பேன்.
இவ்வாறு திண்டிவனம் 12வது வார்டு கவுன்சிலர் சரவணன் கூறினார்.
திண்டிவனம் : பைக் திருட்டு
திண்டிவனத்தில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமானது திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனத்தில் உள்ள நாகலாபுரம் பகுதியில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் கலைச்செல்வியின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மொபட் பைக்கானது நேற்று முன்தினம் இரவு திருடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து முன்னாள் அதிமுக கவுன்சிலர் கலைச்செல்வி திண்டிவனம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
புகாரை பதிவு செய்த டவுன் போலீசார் பைக்கை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
இதுபோன்ற திருட்டு சம்பவங்களை குறைக்க போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கருத்து கூறுகின்றனர்.