Villupuram : சென்னை ரயில் சேவையில் மாற்றம் அறிவிப்பு

Villupuram : தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இதன் காரணமாக, சென்னையிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்னை-புதுச்சேரி பயணிகள் ரயில் (வ.எண். 66051), குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வ.எண். 16128) ஆகிய இரு ரயில்களும் ஜூலை 15-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.