விழுப்புரத்தில் பறிமுதல் வாகனங்கள் ஏலம் | Villupuram News

விழுப்புரத்தில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்.
விழுப்புரம் எஸ்பி அலுவலக செய்தி குறிப்பு : Villupuram மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போன்றவை வரும் 8ம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இந்த ஏலத்தில் 122 இருசக்கர வாகனங்களும் 22 நான்கு சக்கர வாகனங்களும் 4 மூன்று சக்கர வாகனங்களும் மொத்தமாக 149 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. இந்த ஏலமானது வரும் 8ஆம் தேதி விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்க உள்ள இந்த ஏலத்திற்கு 8:30 மணி முதல் 10 மணி வரை முன்பணமாக இருசக்கர வாகனத்திற்கு 2,000 ரூபாயும் நான்கு சக்கர வாகனத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.
ஏலம் எடுப்பவர்கள் தொகையில் 50 சதவீத தொகையை உடனடியாக காசோலையாகவோ அல்லது பணமாகவோ செலுத்த வேண்டும்.
மீதமுள்ள பணத்தை ஏழு நாட்களுக்குள் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். முன்பணமாக கட்டிய பணமானது ஏலத்தொகையில் கழித்துக் கொள்ளப்படும்.
ஏலம் எடுப்பவர்கள் வாகனத்தை வாங்கவில்லை என்றால் அந்த வாகனமானது எவ்வித முன்னறிவிப்புமின்றி மறு ஏலம் விடப்படும்.
விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை :
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
Villupuram பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை திட்டத்தில் பதினோராவது தவளையை பெறுவதற்கு விவசாயிகள் ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு : பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாயை கௌரவ ஊக்கத்தொகையாக விவசாயிகள் பெறுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். தற்போதுவரை விவசாயிகளுக்கு 10 தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது.
பதினோராவது தவணை தொகையை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை சரிபார்த்து கொள்வது அவசியமாகும்.
ஆதார் என்னோடு மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் தங்களது விவரங்களை கிசான் திட்ட வலைதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மொபைல் எண்ணை ஆதாரோடு இணைக்காத விவசாயிகள் அருகே உள்ள இ-சேவை மையங்களில், கிசான் திட்ட வலைதளத்தில் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து விரல்ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் விவசாயிகள் தங்களின் ஆதார் விவரங்களை மார்ச் 5ஆம் தேதிக்குள் கிசான் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கான பதினோராவது தவணைத் தொகை விடுவிக்கப்படும்.
இவ்வாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அவரது செய்திக்குறிப்பில் கூறியிருந்தார்.
விழுப்புரத்தில் காலில் விழுந்து நன்றி தெரிவித்த வேட்பாளர்.
விழுப்புரம் நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்த பின்னரும் வீடு வீடாக சென்று வாக்களித்த வாக்காளர்களுக்கு காலில் விழுந்து நன்றி கூறியுள்ளார்.
விழுப்புரம் நகராட்சி தேர்தலில் 41வது வார்டில் அதிமுக சார்பில் கிருஷ்ணன் போட்டியிட்டார். இவர் 362 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
மேலும் அதே வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட சாந்தகுமார் 369 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஏழு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நேற்று வீடுவீடாகச் சென்று காலில் விழுந்து நன்றி கூறினார்.
இந்த சம்பவம் அப்பகுதி வாக்காளர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.