பைக் மரத்தில் மோதியதில் பிளஸ் 2 மாணவர் பலி | Villupuram News

1,873

பைக் மரத்தில் மோதியதில் பிளஸ் 2 மாணவர் பலி

Villupuram News : விழுப்புரம் அருகே சாலையில் சென்ற பைக்கானது மரத்தில் மோதியதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதியை சேர்ந்தவர் சுதாகர் மகன் சுதர்சன். இவருக்கு வயது 17. இவர் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று கீழ்பாதியை சேர்ந்த காமராஜ் என்ற முதியவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வீட்டிற்கு பைக்கில் செல்லும் வழியில் இரு சக்கர வாகனமானது தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் சுதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

bike-accident-in-villupuram-tindivanam-news

 

மாடுகள் திருட்டு போலீசார் விசாரணை

திருவெண்ணைநல்லூர் அருகே நிலத்தில் கட்டப்பட்டிருந்த 2 பசுமாடுகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளம்வழுதி. இவருக்கு வயது 45 .

இவர் நேற்று காலை அவருடைய இரண்டு பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி விட்டு சென்றனர். கட்டப்பட்டு இருந்த மாடுகளை மதியம் சென்று பார்த்தபோது காணவில்லை.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். மாடுகள் கிடைக்காததால் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட மாடுகளை தேடி வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Villupuram News :விழுப்புரம் மாவட்டம் குமளம் கிராமத்தில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இந்த விழாவிற்கு திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மேலும் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர் திரு சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழுப்புரம் தொகுதியின் எம்எல்ஏ லட்சுமணன் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார்.

வளவனுார் தி. மு. க. , நகர செயலாளர் ஜீவா, ஒன்றிய செயலார் கணேசன், கவுன்சிலர் விஜயா சங்கர், முன்னாள் அரசு வழக்கறிஞர் கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

opening-of-paddy-procurement-station

மேலும் ஊராட்சி தலைவர் பக்தவச்சலம் மற்றும் முருகன், கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நெல் கொள்முதல் திறப்பு விழாவில் பொதுமக்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பானது அங்குள்ள விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் நேரடியாக விவசாயிகள் தங்களது நெல்களை அரசுக்கு விற்பனை செய்யலாம்.

எனவே இது விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய விஷயமாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.

You might also like