திண்டிவனத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள் | Tindivanam Crime News

திண்டிவனத்தில் இருசக்கர வாகனம் திருட்டு :
திண்டிவனத்தில் போக்குவரத்து காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது.
திண்டிவனம் அடுத்த பிரகாச புரத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த் இவருக்கு வயது 45. இவர் விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் இவரது இரு சக்கர வாகனத்தை திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் நிறுத்தி விட்டு பணிக்கு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமானது காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார் வாகமானது எங்கும் கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து இருசக்கர வாகனம் திருடப்பட்டு இருப்பதை உணர்ந்தவர் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்கர வாகனத்தை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அவ்வபோது நடைபெறுகிறது எனவும் அதனை தடுக்க போலீசார் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் திண்டிவனம் வாழ் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் திண்டிவனம் மக்கள் கூறுகின்றனர்.
திண்டிவனம் ஜெயபுரத்தில் முதியவரின் ஸ்கூட்டரில் இருந்து 30 ஆயிரம் திருட்டு
திண்டிவனத்தை சேர்ந்த கேப்ரியேல் என்ற் ஓய்வுபெற்ற ஆசிரியர் தனது வங்கி கணக்கில் இருந்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். பின்னர் அதனை அவரது ஸ்கூட்டரில் வைத்து பத்திரமாக பூட்டியுள்ளார். பின்னர் அவரது நண்பரை சந்தித்து பேசியுள்ளார்.
இதனிடையில் பேட்டரி பழுதுபார்க்கும் கடைக்கு சென்று பழுதான அவரது ஸ்கூட்டரின் பேட்டரியை சரி செய்வதற்காக அதனை கழட்டி எடுத்து கடைக்காரரிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற பின் அவரது ஸ்கூட்டரில் வைத்த 30 ஆயிரம் பணத்தை தேடியபோது, அங்கு அவர் வைத்த இல்லை.
முதியவர் கவனிக்காத நேரத்தில் மர்ம நபர்கள் கள்ள சாவியை பயன்படுத்தி அவரது ஸ்கூட்டரில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து கேப்ரியேல் திண்டிவனம் போலீசில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திண்டிவனம் போலீசார் புகாரை பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவமானது திண்டிவனத்தில் 5 ஆம் தேதி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டிவனம் அடுத்த அனுமந்தையில் நகை அடகு கடையில் திருட்டு :
அனுமந்தை கிராமத்தில் பந்தாரம் என்ற ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் நகை அடகு கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு வயது 52.
இவரது கடையின் பின்பக்க சுவற்றை உடைத்து துளையிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பின் பக்க சுவற்றில் துளையிட்டு கடையில் இருந்த 10 ஆயிரம் ரொக்கம், டிவி, சிசிடிவி கேமரா, ஜெராக்ஸ் மெஷின் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் கடையில் இருந்த லாக்கரை திறக்க முடியாததால் கடையில் இருந்த மற்ற பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதி மக்களை பீதி அடைய செய்துள்ளது. இதுகுறித்து மரக்காணம் போலீசில் கடையின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுவரில் துளையிட்டு திருடிச் சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுபோன்று திருட்டு சம்பவங்களை குறைக்க போலீசார் இரவு நேரத்தில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அனுமந்தை வாழ் பொதுமக்கள் கூறுகின்றனர்.