Villupuam : திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ

169

Villupuam : மாவட்டம், வீடூர் ஊராட்சியில், மயிலம் மத்திய ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செழியன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார். தனது உரையில், கலைஞர் ஆற்றிய அரும்பணிகளையும், திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.

மேலும், தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்யும் திராவிட மாடல் அரசு கடந்த நான்காண்டுகளில் செயல்படுத்தியுள்ள பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், அதன் மூலம் மக்கள் அடைந்துள்ள பயன்களையும் விரிவாக விளக்கினார்.

குறிப்பாக, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற துறைகளில் அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். இந்தக் கூட்டத்தில் திரளான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

You might also like