Tindivanam: முதல்வா் விழா ஏற்பாடுகள்: பாதுகாப்புப் பிரிவு எஸ். பி. ஆய்வு!

59

Tindivanam: சென்னையிலிருந்து திங்கள்கிழமை மாலை கார் மூலம் புறப்பட்டு வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் அளிக்கப்படும் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் முதல்வர், திண்டிவனம் நகரின் மேம்பாலம் வழியாக திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் மண்டபம் வரை நடந்து வந்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, பின்னர் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து, இரவு விழுப்புரத்துக்கு வரும் முதல்வர் சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த பின்னர், செவ்வாய்க்கிழமை விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழுதரெட்டி பகுதியில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம், முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமியின் நினைவு அரங்கத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த நிலையில், திண்டிவனம், விழுப்புரத்தில் விழா நடைபெறும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி. சக்திவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தார். முதல்வரின் பயண வழித்தடப் பகுதிகள், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் கலந்தாலோசித்த பின்னர், விழா மேடை பகுதி, இதர இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார்

You might also like