Rettanai – Holy Angel பள்ளியில் குழந்தைகள் தின விழா

1,419

Holy Angel பள்ளியில் குழந்தைகள் தின விழா

Rettanai – Holy Angel மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக், சி. பி. எஸ். இ. , பள்ளிகளில் நடந்த விழாவிற்கு, பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் மணிமாறன் வரவேற்றார்.

விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சு, கவிதை போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் பரிசுகள் வழங்கினார்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

செஞ்சியில் அறிவியல் கண்காட்சி

gingee school

செஞ்சி சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தாளாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

பள்ளி முதல்வர் சேகர் வரவேற்றார். செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில், மாணவர்கள் 300க்கும் மேற்பட்ட திருக்குறளுக்கு ஓவியங்கள் மூலம் விளக்கியிருந்தனர்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அரங்கம் அமைத்து மாவட்டத்தின் சிறப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

முதுகலை ஆசிரியர் சப்ரூன் தொகுத்து வழங்கினார். முதுகலை ஆசிரியர் யாஸ்மின் நன்றி கூறினார்.

நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like