Koothandavar Kovil Thiruvizha: ஆண்கள் தாலி கட்டிக் கொள்ளும் வினோத நிகழ்வு!! இப்படியும் ஒரு வேண்டுதலா.?

1,864

Koothandavar Kovil Thiruvizha: உலகப்புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் கண் திறத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் மணக்கோலத்தில், தாலிகட்டி கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இவர்களுடன் வேண்டுதல் வைத்த ஆண்களும் தாலி கட்டிக் கொள்ளும் வினோத நிகழ்வும் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலின் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.
இத்தாண்டு கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 29 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதன் படி கூத்தாண்டவர் கோவிலின் முக்கிய நிகழ்வான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் ஏராளமான திருநங்கைகள் பூசாரி கையால் மணக்கோலத்தில் தாலிகட்டி கொண்டு கற்பூரம் ஏற்றி கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிக்காட்டினர்.

திருநங்கைகள் போல வேண்டுதல்கள் வைக்கும் பொது மக்களாகிய ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என அனைவருமே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தாலி கட்டிக் கொள்கிறார்கள்.

 

 

குறிப்பாக ஆண்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எனவும், நோய் நொடி நீங்க வேண்டும் எனவும், தான் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவேண்டும் எனவும் வேண்டுதல்கள் வைத்து ஆண்களும் கூத்தாண்டவர் கோவிலில் தாலி கட்டி கொள்கிறார்கள்.

 

 

You might also like