Vallalar: செஞ்ச வள்ளலார் சங்கம் சார்பில் வகுப்பு தொடக்கம்

75

Vallalar: செஞ்சி – திருவண்ணாமலை சாலையில் உள்ள வள்ளலார் சபைக் கட்டடத்தில், வள்ளலார் வாழ்வியல் பட்டயப் படிப்பு சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது. இதன் வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி நகர சன்மார்க்க சங்கத் தலைவர் பா. தணிகாசலம் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் மருத்துவர் சரவணன், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர்கள் முத்து, கார்த்திகேயன், வேட்டவளம் சன்மார்க்க சங்க நிறுவனர் பச்சையம்மாள் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று தொடக்கவுரையாற்றினர். அனைத்துலக சன்மார்க்க சேவை மைய நிறுவனா் முனைவா் திருக்கோவிலூா் ஜீவ. சீனுவாசன் சிறப்புரையாற்றினார். முடிவில் செஞ்சி நகரச் செயலர் சம்பத் நன்றி கூறினார்.

You might also like