Marakkanam : மரக்காணம் தடுப்பணை, கழுவெளி ஏரி பகுதிகளை கலெக்டர் பழனி ஆய்வு

134

Marakkanam : மரக்காணம் பகுதியில் பருவ மழையின் போதும் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் விதமாக சிறுவாடி, முருக்கேரி, ஆலத்துார், மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பனை குறித்து கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
திண்டிவனம் – மரக்காணம் சாலையில் உள்ள சிறுவாடி கடை தெருவில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும், முருக்கேரி ஏரியை முழுமையாக துார்வாரி சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கந்தாடு கிராமத்தில் கடந்த ஆண்டு பருவமழையின் போது ஏரி கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஊராட்சி ஒன்றிய நிதியின் மூலம் பருவமழை துவங்குவதற்கு முன் உடனடியாக கட்டுமான பணிகளை துவங்கிய சரிசெய்ய வேண்டும். ண்டிப்பாளையம் கழுவெளி ஏரி மத்தியில் செல்லும் சாலையை சீரமைக்கவும், பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் இருபுறமும் மணல்மேடுகளை உடனடியாக அமைத்து பருவமழைக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

You might also like