Collector : மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்

111

Collector : விழுப்புரம் அடுத்த மோட்சகுளம் ஊராட்சியில் துாய்மையே சேவை இயக்கத்தின் கீழ் 150 தென்னங்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார். அதன்படி, மாவட்டத்தில் கடந்த 17 முதல் வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, இன்று (செப்.20) சிறுவந்தாடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் துாய்மையை கடைபிடிப்பது தொடர்பான உறுதிமொழியை பள்ளி மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கி பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை தவிர்த்திட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

You might also like