Deevanur : விமர்சையாக நடைபெற்ற தேர்த் திருவிழா

Deevanur : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தீவனுார் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலின் 15ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருத்தேர் வீதியுலா நேற்று காலை 9: 00 மணிக்கு துவங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தீவனுாரில் முக்கிய வீதிகள் வழியாக வந்த திருத்தேர் வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்