Tindivanam த்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுப்பு:

975

Tindivanam த்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுப்பு:

Tindivanam தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு அவர்கள் திண்டிவனம் & திண்டிவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 26 விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் வைத்துள்ளார்.

பிரபு அவர்கள் தலைமையிலான குழுவினர் தற்போது திண்டிவனம் நேரு வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட் அருகில் விநாயகர் சிலை ஒன்றை வைக்க திண்டிவனம் சார் ஆட்சியரிடம் சென்று அனுமதி கோரினர்.

இதற்கு சார் ஆட்சியர் அவர்கள் அனுமதி கொடுக்க  மறுத்துவிட்டார். அதன் காரணமாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு அவர்கள் விநாயகர் சிலை வைப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் திண்டிவனம் ஏ. எஸ்பி. அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் போலீசார்கள் குவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனால் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 

திண்டிவனத்தில் பொது குளத்தில் கோழி கழிவுகள்:

Tindivanam அய்யன்தோப்பு பகுதியில் உள்ள பொதுக்குளத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று விநாயகர் மண் சிலைகள் வாங்கி பொதுமக்கள் அனைவரும் பூஜை செய்தனர்.

பின்னர் விநாயகர் மண் சிலைகளை செப்டம்பர் 1, 2-ம் நாட்களில் குளங்களில் கரைப்பார்கள். அதன் காரணமாக இந்த விநாயகர் மண் சிலைகளை கரைப்பதற்கு பொதுக்குளத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

அப்போது அக்குளத்தில் பெரிய மூட்டை ஒன்று மிதந்து கிடந்துள்ளது. மேலும் அந்த மூட்டியிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து ரோசனை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் குளத்தில் இருந்த மூட்டையை வெளியே கொண்டு வந்து பார்த்த போது அதில் கோழிக்கழிவுகள் இருந்தன.

மேலும் பொதுக்குளத்தில் கோழிக்கழிவுகளை வீசி சென்ற அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tindivanam த்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 41 மூட்டை குட்கா:

Tindivanam அருகே காரில் 41 மூட்டை குட்கா போதை பொருட்களை கடத்திச் சென்ற மூன்று பேர் கைது.

திண்டிவனம் அடுத்த சந்தைமேடு பகுதியில் போலீசாரின் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்களூரில் இருந்து வந்த காரை சோதனை செய்தனர். அதில் குட்கா போதைப் பொருட்கள் 41 மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ரோசனை காவல் நிலையத்திற்கு காருடன் போதைப் பொருட்களை கொண்டு செல்லப்பட்டன.

மேலும் போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் போதைப் பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

மூன்று நபர்கள் போதைப் பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. அந்த 3 நபர்கள் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த கிஷோர், செஞ்சி காந்தி பஜாரை சேர்ந்த ஜெகநாராம், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கைலாஷ் என தெரிய வந்தது.

இதனை அடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் கார் மற்றும் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

நம் திண்டிவனம் Facbook &  Instagram பக்கங்களை Follow செய்யுங்கள்.

மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like