Melmalayanur: மேல்மலையனூர் அருகே மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Melmalayanur: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம் கடலூர் கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தலா 5.07 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பயனாளிகள் வீடுகள் கட்டி வருவதையும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி வருவதையும் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். ஆய்வின் போது சப்-கலெக்டர் திவ்யாஞ்சுநிகாம், தாசில்தார் தனலட்சுமி, பி.டி.ஓ. ஜெயசங்கர், சையத்முகமது மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.