Villupuram News : மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

1,820

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

Villupuram News : விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இது குறித்து கலெக்டர் மோகன் அவர்கள் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 11ம் தேதி நடக்க உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமிற்காக 5,497 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு 20க்கும் அதிகமான தனியார் துறை வேலை அளிக்கும் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த 18 வயது முதலான மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். தனியார் துறையில் வேலை வாய்ப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது.

தனியார் துறையில் பணி வாய்ப்பினை பெற விரும்புகின்ற மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் அவர்களின் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்காக தனி நிலை அறிக்கை – ரவிக்குமார் எம்பி

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென ரவிக்குமார் எம்பி வலியுறுத்தினார்.

விழுப்புரத்தில் அவர் கூறியதாவது :

  • தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டில் இரண்டு சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்க வேண்டும்.
  • புதிதாக கட்டப்படும் அரசு பள்ளிக் கட்டிடங்களில் சாய்வு தள மேடைகள் அமைக்கப்பட வேண்டும்.
  • தமிழக அரசு பாட திட்டங்களில் மாற்றுத் திறன் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் பிரெய்லி  முறையில் புத்தகங்களை வெளியிட வேண்டும்.
  • அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் 3 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்க வேண்டும் .
  • அது மட்டுமின்றி தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவேன். இவ்வாறு விழுப்புரத்தில் ரவிக்குமாரின் பின் கூறினார்.

கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் – 15 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு

Villupuram News: விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய 15 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகம் எதிரே மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் கலிவரதன் தலைமையில் நேற்று மதியம் சாலைமறியலானது நடந்தது.

விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கும் தகவல் அறிந்ததும் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பரணி நாதன் ஆகியோர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர் .

மேலும் விவசாயிகளை சமாதானப்படுத்தி சாலை மறியலில் இருந்து அப்புறப்படுத்தி விசாரித்தனர்.

விவசாயிகள் கூறுகையில்: செஞ்சி அடுத்த தேவனூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை எடுத்து சென்றதால் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சின்னதுரை தற்கொலை செய்து கொண்டார் .

இது போன்ற நிகழ்வுகள் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறாமல் இருக்கவும் இது போன்ற நிதி நிறுவனங்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் டிராக்டரை எடுத்துச்சென்ற நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கூறினர்.

இறந்த விவசாயி குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கூறினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதும் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட கலிவரதன் உட்பட 15 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

You might also like