Explosives Damage Grocery Store : வெடி மருந்து வெடித்து மளிகை கடை சேதம்.

Explosives Damage Grocery Store : வெடி மருந்து வெடித்து மளிகை கடை சேதம்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள சக்ரவர்த்தி என்பவரது மளிகை கடையின் எதிரே மேல்மலையனூர் ஜே ஜே நகர் நரிக்குறவர் இளைஞர்கள் குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் வேட்டையாடுவதற்காக வெடி மருந்தினை இருசக்கர வாகனத்தில் வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் சைலன்ஸர் வெப்பத்தில் வெடி மருந்து உரசியதில் பையில வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து திடீரென வெடித்து சிதறியது.
இதனால் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதிலஇருசக்கர வாகனம் மற்றும் மளிகைகளின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. இரு சக்கர வாகனத்தின் அருகில நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகிய இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உரிய அனுமதியின்றி வாங்கி வரப்பட்ட வெடி மருந்து வெடித்து சிதறியதால் அருகில் யாரும் இல்லாத நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த வெடி மருந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.