Gingee யில் மின்வேலியில் சிக்கி இறந்தவரின் உடலை மறைத்த 2 பேர் கைது 

934

Gingee : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாமணி. இவருக்கு வயது 50.இவர் விவசாயியாக இருந்து வந்தார்.

கடந்த 21ம் தேதி நிலக்கடலை பயிர் காவலுக்காக சென்ற ரமாமணி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலர் வனப்பகுதியில் மின்வேலி அமைத்து காட்டு பன்றியை வேட்டையாடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அந்த பன்றிகளை வேட்டையாட அமைக்கப்படும் விண்வெளியில் ரமாமணி சிக்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

Gingee போலீஸ் விசாரணை

அதனடிப்படையில் துத்திப்பட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவரை போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் கடந்த மாதம் 21ம் தேதி இரவு துத்திப்பட்டு சேர்ந்த ராமலிங்கம் மர்றும்  சுந்தரமூர்த்தி ஆகிய இருவரும் காட்டுப்பன்றியை வேட்டையாட மின்வேலியை வைத்திருந்தனர்.

அந்த மின் வேலியில் சிக்கி ரமாமணி இறந்துவிட்டார் என்றார். மேலும் அவரது உடலை மறைக்க தன்னிடம் உதவி கேட்டனர். அவர்களுடன் சேர்ந்து ரமாமணியின் உடலில் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் எடுத்துச்சென்று பெரிய ஏரி மலைக்குன்றின் மேல் இருந்து 30 அடி ஆழத்தில் உள்ள புதரில் வீசினோம் என்று கூறினார்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தடயவியல் இயக்குனர் சண்முகம் மற்றும் செஞ்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களின் உடலை வீசிய இடத்திற்கு சென்றனர்.

ரமாமணி உடலை கைப்பற்றிய போலீஸ்

அங்கு செஞ்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் ரமாமணி உடலை கைப்பற்றினர். மேலும் ரமாமணியின் இறப்பிற்கு காரணமாகவும் அவரது உடலை மறைக்க முயன்ற பெருமாள் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ராமாமணி இறந்த மறுநாள் போலீசார் தன்னை பிடித்து விடுவார் என பயந்து ராமலிங்கம் விஷம் அருந்தியுள்ளார்.

அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சில தினங்களுக்கு முன்னர் தான் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

தற்போது அவரது உடல்நிலை சரியில்லை என்பதால் நேற்று போலீசார் அவரை கைது செய்யவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு இறந்தவரின் உடலை மறைக்க முயன்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து கைதாவது இதுவே பகுதியில் முதல்முறையாகும்.

மேலும் படிக்க மின்வேலி அமைப்பதை தடைசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மின் மோட்டார்கள் திருடிய நபருக்கு தர்ம அடி

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் அவ்வப்போது மின் மோட்டார்கள் திருடு போவதை வழக்கமாக இருந்து வந்தது. கோட்டக்குப்பம் அருகே விவசாய மின் மோட்டார் திருடிய நபரை தற்போது போலீசார் கைது செய்தனர்.

ராயபுதுபாக்கம், துருவை, ஆபிரம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சில நாட்களாக விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் மற்றும் ஒயர்கள் திருடு போவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

breaking-the-lock-of-the-house-and-stealing in gingee tindianam

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், பட்டப்பகலில் 4 பேர் தயாநிதி என்பவரது விவசாய நிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டாரை கழற்றிக்கொண்டிருந்தனர்.

இதனை விவசாய வேலை செய்துகொண்டிருந்த ஒரு தொழிலாளி பார்த்துள்ளார். மேலும் அவர் அந்த கும்பலை பிடிக்க முயன்றபோது அனைவரும் தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிவர்களில் ஒருவரை அவர் பிடித்துள்ளார். சிக்கிய அவரை தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற விழுப்புரம் மாவட்டம் சார்ந்த செய்திகளை தெரிந்துகொள்ள நான் திண்டிவனம் இணைய பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

You might also like