Lightning : மின்னல் தாக்கி ஐந்து மாடுகள் இறப்பு

Lightning : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்தகாட்டுச்சிவிரிகிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55). விவசாயியான இவர் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அந்தபகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது இவரது கொட்டகையின் மீது மின்னல் தாக்கியதல், அங்கு கட்டபட்டு இருந்த 4 மாடுகள் பரிதாபமாக செத்தன.
இதேபோல் திண்டிவனம் அடுத்த பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மனைவி அலமேலு தனது மாடு மற்றும் ஆடு ஒன்றையும் வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் கட்டியிருந்தார்.
அப்போது மின்னல் தாக்கியதில் அவை இரண்டும் செத்து போனது. மேலும், வீட்டின் வெளியே படுத்திருந்த அலமேலு மீதும் மின்னல் தாக்கியதில் அவர் லேசான காயமடைந்தார். இதை யடுத்து அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.