6 மாதம் கூட ஜெயிலில் வையுங்கள் | CV சண்முகம் ஆவேசம்

568

அதிமுகவில் இணைந்த தேமுதிக தொண்டர்கள் :

திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் CV சண்முகம் முன்னிலையில் தேமுதிக தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

செஞ்சி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோவிந்தசாமி ஏற்பாட்டின் பேரில் தேமுதிகவைச் சேர்ந்த செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாபு ஆகியோர் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 400க்கும் அதிகமான தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் CV சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்த விழாவானது திண்டிவனத்தில் நேற்று காலை நடைபெற்றது. திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுனன், செஞ்சி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஜெகதீசன், பஞ்சமூர்த்தி, பச்சையப்பன், ரமேஷ், சிவா, மனோகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் CV சண்முகம் ஆவேசம்

மானூர் அடுத்த மன்னார்சாமி கோவில் அருகே மரக்காணம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் பேசியதாவது :

எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கத்தை அம்மா ஜெயலலிதா அவர்கள் கட்டிக்காத்த அதிமுகவை ஆட்சியில் அமர்ந்தவுடன் முடக்கி விடலாம் என கற்பனை செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

உங்களுடைய கனவு பலிக்கவே பலிக்காது. சிறையில் அடைப்பது என்பது எல்லாம் சகஜம், அரசியலுக்கு வந்துவிட்டால் இதையெல்லாம் பார்க்கத்தான் வேண்டும். பதவியை மட்டும் அனுபவிக்க முடியாது.

பத்து ஆண்டுகாலம் திமுகவின் முதல்வர் கனவை தகர்த்து ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் செய்த இயக்கம் அதிமுக ஆகும். ஆகவே எங்களை அச்சுறுத்த வேண்டாம். முடிந்தால் எங்களை ஜெயிலில் போடுங்கள் ஆறு மாசம் கூட ஜெயிலில் வையுங்கள். எங்களுக்கு பிரச்சனை இல்லை.

ஜெயிலில் ரெஸ்ட் எடுத்து விட்டு வெளியே வருவோம். இந்த எண்ணத்தை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் நாட்டை ஆள்வதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்த வாய்ப்பை வாக்களித்த மக்களுக்காக நல்லது செய்து பயன்படுத்துங்கள்.

எங்களை முடக்கலாம் என்ற கனவை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மை செய்யுங்கள். இவ்வாறு முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் பேசினார்.

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பைக் திருட்டு 

திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனமானது திருடப்பட்டுள்ளது. திண்டிவனம் அடுத்த குருவம்மா பேட்டை மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மதிவாணன் அதன் பாலாஜி.

இவர் கடந்த 18ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது தங்கையை பார்ப்பதற்காக வந்துள்ளார். மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று தங்கையை பார்த்துவிட்டு திரும்பி வந்துள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் காணவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனத்தில் தேவையற்ற தண்டவாளங்கள் நீக்கம்.

திண்டிவனம் ரயில் பாதை அருகே பயன்பாடின்றி தேவையற்ற நிலையில் இருந்த இரும்பு தண்டவாளங்களை நீக்கும் பணியானது நடைபெற்றது. விழுப்புரம் முதல் தாம்பரம் வரை நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை பயன்பாட்டில் இருக்கின்றது.

இந்த ரயில் தண்டவாளங்களுக்கு அருகே பல்வேறு பணிகளுக்காக பல காலகட்டத்தில் சிறிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. அவைகள் தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அந்த தேவையற்ற இரும்பு தண்டவாளங்களை அகற்றும் பணியானது நடைபெற்றது.

இவற்றை அகற்றி ரயில் பாதையை பராமரிக்க ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர். எனவே திண்டிவனத்தில் ரயில்வே பாதையில் தேவையற்ற பயன்பாடின்றி கிடக்கும் இரும்பு தண்டவாளங்கள் கிரேன்கள் மூலம் அகற்றம் பணியானது நடந்தது.

You might also like