Tamilnadu Congress | மோழியனூர் & கூட்டேரிப்பட்டில் காந்தியின் திருவுருவ படங்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

Tamilnadu Congress கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, செயல் தலைவர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் எம் பி இவர்களின் அறிவுறுத்தலின்படி
விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ஆர் பி ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மயிலம் தெற்கு வட்டாரம் மோழியனூர் கிராமத்தில் இந்திரா திடலில் 2 10 2022 ஞாயிறு காலை 8:30 மணி அளவில் காந்தி பிறந்த நாள் விழாவும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மயிலம் வட்டார தலைவர் இல.கண்ணன் கலந்து கொண்டு இரு பெரும் தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.
மாவட்ட செயலாளர் டி ஆர் தாமோதரன், கிராம கமிட்டி செயலாளர் கே எஸ் சக்திவேல், கே.நடேசன், வே.சுப்பிரமணி, ஏ.முருகன் என்.அன்பழகன் எஸ்.ராஜா எ.ராஜ்குமார் எஸ் ஆதிமூலம் வினோத் ஒரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tamilnadu Congress : கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் 2 10 2022 ஞாயிறு காலை 10 மணி அளவில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் காந்தி, காமராஜர் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
வட்டார தலைவர் இல.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டார துணைத் தலைவர் கே.சீத்தாபதி, கிராம கமிட்டி தலைவர்.
இ.கருணாநிதி, எஸ்.ராமலிங்கம், மகிளா காங்கிரஸ் அ.காளியம்மாள், க.லட்சுமணன், ஏ.முருகன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தாய்மார்களும் கலந்து கொண்டு காந்தி, காமராஜரின் திருநாமங்களை சொல்லி புகழ் முழுக்கமிட்டனர்.
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.