Gandhi Jayanthi | முகக்கவசத்தில் காந்தி முகம் – அசத்தும் ஓவிய ஆசிரியர்

Gandhi Jayanthi | முகக்கவசத்தில் காந்தி முகம் – அசத்தும் ஓவிய ஆசிரியர்
Gandhi Jayanthi : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு… “முகக்கவசத்தில்” அசத்தலாக காந்தி முகம்.!
ஓவியம் செதுக்கி பகுதிநேர ஓவிய ஆசிரியர் அசத்தல்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் அவர்கள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு “முகக்கவசத்தில்” மகாத்மா காந்தியடிகள் அவர்களின் உருவ ஓவியத்தை செதுக்கினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டும் மற்றும் கொரொனா இல்லை என்று முக கவசம் அணிவது சற்று குறைந்துள்ளது. தற்போது பருவகால நோய்களின் அறிகுறிகள் கொரோனாவுடன் ஒத்துப் போவதால்,
கொரோனா சமயத்தில் நம் கடைபிடித்த அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் இப்பொது கடைப்பிடிப்பது நல்லது. எனவே பொதுமக்களிடையே முககவசத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்.
முகக்கவசத்தில் காந்தி
காந்தி ஜெயந்தி முன்னிட்டு “முகக்கவசத்தில்” கத்திரிக்கோல் கொண்டு 8 நிமிடங்களில் காந்தி ஓவியத்தை பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் செதுக்கினார்.
பொதுமக்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களின் புதுமையான முறையில் முகக்கவசத்தில் காந்தி முகம் ஓவியம் செதுக்கியதற்க்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.