திண்டிவனத்தில் உள்ள கோவிலில் பெண்களிடம் நகை பறிப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தீர்த்த குளம் பகுதியில் அமைந்துள்ள மூன்றில் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதன்காரணமாக செஞ்சி மயிலம் திண்டிவனம் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் முன்னெச்சரிக்கையாக கோவில் முழுவதும் அதிகப்படியான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் அங்கிருந்து பெண் பக்தர்களிடம் சுமார் 6 பவுன் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்தனர் அதனை தொடர்ந்து அந்த மூன்று பெண்களும் கூச்சலிட்டபடி மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனையடுத்து அந்த மூன்று பெண்களும் திண்டிவனத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் அவர்கள் இந்த சம்பவத்தை குறித்து போலீஸில் விரிவாக புகார் அளித்தனர் திண்டிவனம் போலீசார் இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் அருகே இருக்கின்ற ராஜா குளம் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக திருவிழாவில் சில மர்ம நபர்கள் இதேபோன்று 6 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர் அதனைத் தொடர்ந்து திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதால் அவற்றை தடுக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் திடீரென பெண்கள் 12 திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.