Villupuram: புகையிலைப் பொருள்கள் விற்பனை; ஆட்சியா் அறிவுறை

78

Villupuram: விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்புடைய அலுவலர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை தடுப்பு செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

காவல் துறை, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உள்ளாட்சித் துறை அலுவலர்கள் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டோர் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக, புகையிலைப் பொருள்கள் விற்பனை தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

You might also like