Tindivanam News : 5 வீடுகளில் கொள்ளை சம்பவம்

விழுப்புரம் மாவட்டம் மற்றும் Tindivanam பகுதியில் ஆங்காங்கே கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. சிறிது நாட்களுக்கு முன்னர் செஞ்சியில் ஒரு வீட்டை உடைத்து தங்க நகை வெள்ளி நகைகள் சூறையாடப்பட்டன. தற்போது திண்டிவனம் பகுதியிலும் தொடர்ந்து 5 கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள உதயம் நகரை சேர்ந்தவர் சையத் அசீன். இவர் நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ சார்பில் திண்டிவனம் 13 வது வார்டில் போட்டியிட்டார்.
தொடர்ந்து ர் தேர்தல் பணியின் காரணமாக வீட்டிற்கு செல்லாமல் எஸ்டிபிஐ அலுவலகத்திலேயே தங்கியிருந்துள்ளார். காலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த அரை கிலோ வெள்ளி பொருட்கள் 10 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் ஒரு டிவி ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சையத் அசீன் திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் யார் கொள்ளை அடித்தனர் என்று விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக Tindivanam போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
இதுமட்டுமன்றி திண்டிவனம் பகுதியை சுற்றிலும் 5 வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
திண்டிவனம் பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரோந்து பணிகள் சரியாக நடைபெறாமல் இருந்தது. இதனைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே இனி தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென திண்டிவனம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் போது கொள்ளை மற்றும் பிற சமூக விரோத செயல்பாடுகள் தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.