Mailam : மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா

Mailam : மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் ஆவணி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 6: 00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது. காலை 11: 00 மணிக்கு பாலசித்தர், வினாயகர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் அபிஷேகம் நடந்தது.
பகல் 12: 00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகாதீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிற்பகல் 1: 00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6: 00 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பால் சந்தனம் பன்னீர் தேன் இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகா தீபாரதனை வழிபாடு நடந்தது. இரவு 8: 00 மணிக்கு மலர்களினால் உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.