Laundry Workers : விழுப்புரத்தில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Laundry Workers : தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே இன்று (செப்.,25) நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சலவைத் தொழிலாளர் மத்திய சங்க மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் ஏழுமலை, முத்துவேல், ஏழுமலை, சக்திவேல், நடராஜன், மருதவேல் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், காணை கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.