கிணற்றில் ஆண் சடலம் – போலீஸ் விசாரணை | Tindivanam Crime News

687

கிணற்றில் ஆண் சடலம் – போலீஸ் விசாரணை

Tindivanam Crime News : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக பெரியதச்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில் போலீசார் நேரில் சென்று உடலை மீட்டு விசாரணை செய்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிணற்றில் கிடைப்பதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து போலீசார் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த நபர் யார்? தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இறந்த நபர் உள்ளூரா அல்லது வெளியூரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விக்ரவண்டி அடுத்த பேரணி கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.

 

திண்டிவனத்தில் பைக் மோதி தொழிலாளி பலி

Tindivanam Crime News : : திண்டிவனத்தில் உள்ள கிடங்கள் (2) பகுதியை சேர்ந்த துரைக்கண்ணு என்பவர் நேற்று முன்தினம் இரவு பைக் மோதி உயிரிழந்தார்.

கிடங்கள் (2) பகுதியை சேர்ந்த துரைக்கண்ணு சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு வயது 58. நேற்று முன்தினம் இரவு இந்திராநகர் பஸ் நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது அந்த வழியாக மரக்காணத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த இருசக்கர மோட்டார் வாகனமானது சாலையோரம் நின்று கொண்டிருந்த துரைக்கண்ணு மீது மோதியது.

இதில் துரைக்கண்ணு படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் .இதனையடுத்து திண்டிவனம் டவுன் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மூதாட்டி மர்ம சாவு – Tindivanam Crime News

திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர் கிராமத்தில் மல்லிகா என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவருக்கு வயது 65. இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டதால் குடிப்பழக்கம் இருந்ததாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

சம்பவத்தன்று மல்லிகாவும் சீர்காழி அருகே சிறு நகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரும் சேர்ந்து மது பாட்டில்களை வாங்கி வந்து மது குடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இன்று காலை மல்லிகா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர்.

ஊர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அதில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகா இறந்ததற்கான காரணத்தையும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஒன்றாக மது அருந்திய பார்த்திபனிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

நம் திண்டிவனம் Youtube சேனலை Subscribe செய்யுங்கள்.

You might also like