Marakkanam News : மரக்காணம் அருகே மது அருந்தி ஒருவர் உயிரிழப்பு.

293

Marakkanam News :மரக்காணம் அருகே மது அருந்தி ஒருவர் உயிரிழப்பு.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே செய்யாங்குப்பம் இருளர் காலணி பகுதியை சேர்ந்தவர் ரங்கன் என்பவரது மகன் ரஜினி வயது 36, கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை அதிக மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் தூங்கி உள்ளார்,

அப்போது தூக்க நிலையில் அவர் இறந்து கிடந்துள்ளார் இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்,

தகவலின் பெயரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பெரியத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து போன ரஜினியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like