Non Stop Current in Tamil Nadu: கோடை காலத்தில் தடையில்லா மின்சார சேவை வழங்க நடவடிக்கை

Non Stop Current in Tamil Nadu: கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெப்பத்தின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு மே 2-இல் உச்சபட்ச மின் தேவை 20 ஆயிரத்து 830 மெகாவாட்டாக இருந்தது.
தற்போது கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் மின்சார தேவை நாள்தோறும் 19 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கிறது.
இது மேலும் அதிகரிக்கும். இந்நிலையில் கோடையில் தடையில்லா மின்சார சேவையை வழங்க மின்வாரியம் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.