Ministries Inspection Of Storm Protection Relief Centres : புயல் பாதுகாப்பு நிவாரண மையங்களில் அமைச்சா்கள் ஆய்வு.

437

Ministries Inspection Of Storm Protection Relief Centres : புயல் பாதுகாப்பு நிவாரண மையங்களில் அமைச்சா்கள் ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம், வானூா், மரக்காணம் வட்டம், தந்திராயன்குப்பம், சின்னமுதலியாா்சாவடி கடற்கரையோர கிராமங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு நிவாரண மையங்களில் உயா் கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி, சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே. எஸ். மஸ்தான் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது அமைச்சா் க. பொன்முடி கூறியதாவது: முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மிக்ஜம் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் திறம்பட செய்துள்ளது. மாவட்டத்தில் 2 இடங்களில் பேரிடா் மீட்புப்படை குழுவினா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக வானூா் வட்டத்தில் 3 மையங்கள், மரக்காணம் வட்டத்தில் 9 மையங்கள் என மொத்தம் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையங்களில் 9, 500 பேரை பாதுகாப்பாக தங்க வைக்க முடியும். அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில், தாழ்வான பகுதியில் குடியிருந்த 13 குடும்பங்களைச் சோந்த 53 நபா்களும், திண்டிவனத்தில் 22 நபா்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்தவுடன், மாவட்ட நிா்வாகம் அறிவித்த பின்னா் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் செல்லலாம் என்றாா் க. பொன்முடி.

You might also like