Tindivanam : அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் குழுவினர் ஆய்வு

1,246

Tindivanam : அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் குழுவினர் ஆய்வு

Tindivanam அரசு ஆஸ்பத்திரி தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் மனிஷ் பிரியதர்ஷி, சுரேந்திரநாத் ஆன்ட்டி, பெடி சிட்டி கிரேந்தி ஆகியோரை கொண்ட மத்திய அரசின் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய கட்டிட பணிகள், தேவயைான மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது திண்டிவனம் ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் சாந்தகுமாரி மற்றும் டாக்டர்கள் வளவன், முரளி ஸ்ரீ, சீனிவாசன், சுரேஷ்குமார், ராஜசேகர், இளங்கோ மற்றும் செவிலியர்கள்,
அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வு 3 நாட்கள் நடைபெற உள்ளதாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

Saraswathy College | ஆத்த மித்ரா திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தன்னார்வர்களுக்கான 12 நாள் முகாம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று துவக்க விழா நடைபெற்றது.
saraswathy college tindivanam
இவ்விழாவில் திண்டிவனம் வட்டம் சார் ஆட்சியர் அமித் தலைமை தாங்கினார்.
இத்திட்டத்தின் இயக்குனர் கே. வாசுதேவன் கல்லூரி முதல்வர் முனைவர் மா. வீரமுத்து, நிர்வாக அலுவலர் செ. சிவா , துணை முதல்வர் ச. பிரான்சிஸ் , பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாசிரியர் தண்டபாணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திட்ட வகுப்பு ஆசிரியர் செந்தில் குமார் தீயனைப்புத்துறை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் உடற்கல்வி இயக்குனர் த ப. மருது ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like