திண்டிவனத்தில் முன்னாள் கவுன்சிலருக்கு நோட்டீஸ் | Tindivanam News

1,224

திண்டிவனத்தில் முன்னாள் கவுன்சிலருக்கு நோட்டீஸ்

Tindivanam News : திண்டிவனத்தில் உள்ள கிடங்கல் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் திமுக முன்னாள் கவுன்சிலர் ஆழ்துளைக்கிணறு அமைத்ததால் நகராட்சி கமிஷ்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் நகராட்சியில் 29ஆவது வார்டில் உள்ள சுந்தரம் 2-வது தெருவில் முன்னாள் திமுக கவுன்சிலர் பாஸ்கரன் வசித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நடந்த நகரமன்ற தேர்தலில் திமுக கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக நின்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில் முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் தனது வீட்டின் முன்பு பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் 300 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றை அமைத்து போர் பைப் அமைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி உதவி பொறியாளர் தேவநாதன், டவுன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, நகரமைப்பு ஆய்வாளர் கமலின் சுகுணா, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையை அடுத்து நகராட்சி கமிஷனர் சௌந்தர்ராஜன் திண்டிவனம் டவுன் போலீசில் முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் சட்டத்திற்குப் புறம்பாக அவரது வீட்டின் முன்பு ஆழ்துளை பைப் அமைத்துள்ளார், இதுகுறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தார்.

மேலும் கமிஷனர் பாஸ்கரன் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறை விரைவில் மூடாவிட்டால் நகராட்சி சார்பில் மூடப்பட்டு அதற்கான செலவை தங்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

மேலும் சட்டத்திற்கு புறம்பாக சாலையில் ஆழ்துளை கிணறு அமைத்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பைக் திருட்டில் ஈடுபட்ட ஆலங்குப்பம் வாலிபர் கைது.

திண்டிவனம் அடுத்த ஆரோவில் அருகே வெளிநாட்டு நபரின் இரு சக்கர வாகனத்தை திருடிய ஆலங்குப்பத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் டோல்கேட் அருகே வழக்கம்போல வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிணங்க உயர்ரக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் ஆலங்குப்பம் புது நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் ரஞ்சித், வயது 23 எனவும் விசாரணையில் தெரியவந்தது.

அதனையடுத்து அந்த பைக்கானது வெளிநாட்டை சேர்ந்த சைமன் என்பவரின் வாகனம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பைக்கை ஓட்டி வந்த ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

அவர் ஓட்டிவந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தன.ர் மேலும் அப்பகுதியில் இவர் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 இந்த உயர் ரக பைக் ஆனது உரிய நபரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்படும் என போலீசார் கூறினர்.

மயிலத்தில் திறன் மேம்பாட்டு கழக பயிற்சி நிறுவனம் திறப்பு :

Tindivanam News : திண்டிவனத்தில் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை சார்பில் திறன் மேம்பாட்டு கழக பயிற்சி நிறுவனமானது தொடங்கப்பட்டது.

இந்தத் தொடக்க விழாவில் அறக்கட்டளைத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

 மயிலம் கல்லூரி முதல்வர் திரு செந்தில் வரவேற்றார். மேலும் செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.

மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், புருேஷாத்தமன், பி. டி. ஓ. , க் கள் திருவேங்கடம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். துணை சேர்மன் சுகுமாறன் வாழ்த்திப் பேசினார்.

இந்த துவக்க விழாவில் கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருதல் அவர்களது திறனை மேம்படுத்துதல் போன்றவற்றை புதிதாக அமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு கழக பயிற்சி மையமானது செய்யும் என கூறப்பட்டது.

You might also like