Election : மனு தாக்கல் துவக்க பணி; கலெக்டர் ஆலோசனை

Election : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவங்க இருப்பதையொட்டி, அலுவலர்களுடனான கலெக்டர் ஆலோசனைக் கூட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி, மனு தாக்கலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தாசில்தார் யுவராஜ், நேர்முக உதவியாளர் லட்சாதிபதி, சமூகநல தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் தனி தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.