Award : தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

140

Award : நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவா்கள், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்கள் விஜயகுமாா், சற்குணம் ஆகியோரின் ஏற்பாட்டின்பேரில், 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை ஆசிரியா் பிரபாகரன் தலைமை வகித்தாா். இந்தப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்கள் விஜயகுமாா், சற்குணம் ஆகியோா் முறையே தலா ரூ. 5 ஆயிரம், 4 ஆயிரம், 3 ஆயிரம் வழங்கி சிறப்புரையாற்றினா். பெற்றோா் – ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் கதிா்வேல் நன்றி கூறினாா். ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

You might also like