Flood relief: ஓங்கூர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல்

Flood relief: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் வெள்ள நிவாரணம் வழங்க கோரி நேற்று காலை 11:00 மணியளவில் சாலை மறியல் செய்ய திரண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தாலுகா நிர்வாக அதிகாரி சிவா, ஓங்கூர் துணை காவல் ஆய்வாளர் சசிகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.