Vikravandi : தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தாருக்கு நிவாரண உதவி

159

Vikravandi : விக்கிரவாண்டி வாணியர் வீதியை சேர்ந்த கிருஷ்ணன், (55) கூலித் தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் தீப்பற்றி எரிந்து சேதமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விக்கிரவாண்டி மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, அரிசி, புடவை, வேட்டி, மண்ணென்ணெய் மற்றும் அரசு உதவி தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், வி. ஏ. ஓ. , சரத்யாதவ், உதவியாளர் செந்தில்குமார் உடனிருந்தினர்.

You might also like