Mailam : உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க எதிர்ப்பு கூட்டத்தில் தீர்மானம்

168

Mailam : விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றிய ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் கூட்டேரிப்பட்டில் நடை பெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் வெங்க டேசன் முன்னிலை வகித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஆண்டுகள் பதவி காலம் முடிவடையாத நிலையில் உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து தேர்தல் நடத்துவது என்ற முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். தேர்தல் நடத்துவதை மறு பரிசீலனை செய்யாத நிலையில், நீதிமன்ற வழக்கு தொடர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜோதிலட்சுமி வர்ண முத்து நன்றி கூறினார்.

You might also like