Sivakumar MLA – மயிலத்தில் டோல்கேட் அமைப்பதை கைவிட வேண்டும்

1,234

 டோல்கேட் அமைப்பதை கைவிட வேண்டும் – Sivakumar MLA

மயிலம் தொகுதியில் சுங்கச்சாவடி அமைப்பதை கைவிட வேண்டுமென பா. ம. க. , Sivakumar MLA கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த 2010ம் ஆண்டு காங். , ஆட்சியில் திண்டிவனம் – கிருஷ்ணகிரி இடையே 180 கி. மீ. , தேசிய நெடுஞ்சாலையை 7 மீட்டரிலிருந்து 10 மீட்டராக அகலப்படுத்தி சாலை அமைக்க 610 கோடி ரூபாயில் பணி துவங்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.

டோல்கேட் அமைப்பதை கைவிட வேண்டும்; பா. ம. க. , எம். எல். ஏ. , கோரிக்கை

இத்திட்டமானது டான் ஸ்டோரி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு 2012ம் ஆண்டு மே மாதம் துவங்கி 2014 மே மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுது.

இந்நிறுவனம்2016ம் ஆண்டு வரை 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்திருந்தது. இதனால், அவர்களுடைய ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டு மீண்டும் 2019ம் ஆண்டு 487  கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீதமுள்ள பணிகளை 2019ம் ஆண்டு நவம்பரில் துவங்கி 20 மாதங்களுக்குள்முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

இதனை எஸ். பி. கே. , நிறுவனம் எடுத்து பணிகளைத் துவங்கியது. ஆனால், ஆங்காங்கே தரமற்ற முறையில் பணி நடைபெறுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

முறையாக அமைக்காத சாலைக்கு மயிலம் தொகுதிக்குட்பட்ட சேர்விளாகம் ஊராட்சி நங்கிலிகொண்டான் அருகே சுங்கச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

12 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ள திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை விரைந்து முடிக்க வேண்டும். தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும்.

நங்கிலிகொண்டானில் சுங்கச்சாவடி அமைப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

mailam pmk mla sivakumar

நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like