திண்டிவனத்தில் மாணவர்களிடையே மோதல் | Tindivanam Crime News

918

திண்டிவனத்தில் மாணவர்களிடையே மோதல்

Tindivanam Crime News : திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது .

இந்நிலையில் இக்கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கக்கூடிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை கண்ட பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில் காணப்பட்ட தாக்குதல் குறித்து திண்டிவனம் ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வேலை வாய்ப்பு முகாமில் 829 பேருக்கு பணி நியமனம்

திண்டிவனத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 829 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் 3000கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் பாலமுருகன் துவக்கி வைத்தார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் வரவேற்று பேசினார்.

job fair in tindivanam st anns college

கல்லூரி செயலாளர் பீட்டர்பால் இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு தலைமை தாங்கினார். வேலை வாய்ப்பு முகாமில் 121 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் திண்டிவனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள் பங்கேற்றனர். இந்த முகாமில் 3209 பேர் பங்கு பெற்றனர்.

இறுதியில் தேர்வு செய்யப்பட்ட 829 பேருக்கு தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காஞ்சனாதேதி பணி நியமன ஆணையை வழங்கினார். உதவி திட்ட அலுவலர் கௌதமன் நன்றி உரையாற்றினார்.

 

திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சருக்கு மணிமண்டபம்.

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான தகுந்த இடத்தை செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 சமூகநீதி போராளிகள் இறந்தனர்.

அவர்களுக்கும் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கும் விழுப்புரத்தில் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் ஜானகிபுரம் அருகே மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்தனர்.

இந்த இடத்தை நேற்று செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் ஜெயசீலன் அவர்கள் ஆய்வு செய்தார். இது தொடர்பாக ஓமந்தூரில் உள்ள ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபத்தை பார்வையிட்டார் ஜெயசீலன் அவர்கள்.

இவருடன் டிஆர்ஓ ராஜசேகரன் ஆர்டிஓ ரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

கிரிக்கெட் விளையாடும் போது இரு தரப்பினரிடையே மோதல் |Tindivanam Crime News

Tindivanam Crime News : திண்டிவனத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த ரோஷனை காலனியை சேர்ந்தவர்கள் உதயன், சிவகுமார், ஹரிஹரன், ரியாஸ் இவர்கள் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினர்.

கிரிக்கெட் விளையாடும்போது அப்பகுதியை சேர்ந்த இமானுவேல், கோபிநாத், புகழேந்தி ஆகியோர் பைக்கில் கிரிக்கெட் விளையாடும் இடத்தைச் சுற்றி வந்தனர்

அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொண்டு வந்த நாயானது பைக்கில் வந்தவர்களைப் பார்த்து குறைத்துள்ளது. இதனால் பைக்கில் வந்தவர்களை சிறுவன் எச்சரித்துள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனை தொடர்ந்து மருத்துவமனையிலும் இருதரப்பினரிடையே மீண்டும் தாக்குதல் உருவானது. இந்த சம்பவம் குறித்து ரோசனை போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

You might also like