Tindivanam கிடங்கல் (2) பகுதியில் திடீரென்று போராட்டம்

458

Tindivanam நகராட்சி 24 வது வார்டு தி. மு. க., வேட்பாளரை அறிவிக்க கோரி, சிறுபான்மை பிரிவு நிர்வாகி கிறிஸ்துவ ஆலயம் முன்பு நேற்று இரவு திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் நகராட்சி யில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் 24 வது வார்டில் தி. மு. க., வேட்பாளர் யார் என அறிவிக்கப்படவில்லை.

இந்த வார்டில் சமீபத்தில் அ. தி. மு. க.. விலிருந்து விலகி தி.மு.க., வில் இணைந்தவருக்கு சீட் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. இதே வார்டில் தி.மு.க., மாவட்ட சிறுபான்மை பிரிவை சேர்ந்த ஜெரோம் ஆரோக்கியராஜ், சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர்களில் யார் தி. மு. க., வின் அதிகார பூர்வ வேட்பாளர் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது. கட்சி சார்பில் பி பார்ம் யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்படும்.

இந்நிலையில் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் Tindivanam கிடங்கல் (2) பகுதியிலுள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில், நேற்று இரவு 7.30 மணியளவில் திடீரென்று போராட்டம் நடத்தினர். இது குறித்து அவர், கூறுகையில், ‘தி. மு.க.,வில் சிறுபான்மையான கிறிஸ்தவர்களுக்கு சீட் வழங்க வேண்டும். 24 வது வார்டில் தி.மு.க. சார்பில் யார் வேட்பாளர் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. யாருக்கு சீட் என்று கட்சி உடனே அறிவிக்க வேண்டும்’ என்றார். தி. மு.க., பிரமுகர் நடத்திய திடீர் போராட்டத்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

You might also like