விக்கிரவாண்டி வாக்குச் சாவடியில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்றது.

திண்டிவனம் அடுத்துள்ள விக்கிரவாண்டி பேரூராட்சிகான வாக்கு எண்ணும் மையமானது விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வாக்கு எண்ணும் மையங்ககான அடிப்படை வசதிகளும் தீவிரமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வாக்கு எண்ணும் மையத்தின் வளாகங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைக்கும் அறைகள் உள்ளிட்ட பல இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியானது நடைபெற்றது.
பாதுகாப்பு பணியின் ஒரு அங்கமாக மின்விளக்கு அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. இந்த பணியை தேர்தல் அலுவலர் அண்ணாதுரை பார்வையிட்டார்.
மேலும் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த பாதுகாப்பு பணி ஆய்வின்போது துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், இளநிலை உதவியாளர் ராஜேஷ் மற்றும் டெக்னீசியன் ராஜ் மோகன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
விக்கிரவாண்டி மட்டுமல்லாமல் திண்டிவனத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள வாக்குச்சாவடிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் வாக்கு எண்ணிக்கையானது நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.